சிறைவாசிகள் 27 பேருக்கு தொழிற்பயிற்சி நிறைவு சான்றிதழ்

சிறைவாசிகளுக்காக கோவை மத்திய சிறையில் கணினி பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், தொழில் பயிற்சி முடித்த 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.சண்முகசுந்தரம் மற்றும் சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: தமிழக சிறை துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சிறையில் இருந்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள், விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடா வண்ணம் தொழில் தொடங்க அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.



அதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி சுயதொழில் பயிற்சி நிலையம் மூலம், மத்திய சிறைவாசிகளுக்கு ஏசி, ரெப்ரிஜிரேட்டர், மற்றும் வாஷிங் மெஷின் போன்ற வீட்டு மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.



அதில் பயிற்சி பெற்ற 27 சிறைவாசிகளுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் எம்.ஊர்மிளா ஆகியோர் சிறைவாசிகளுக்கு பயிற்சி நிறைவுச் சான்றிதழ் வழங்கினர்.



இதனைத் தொடர்ந்து, சிறைவாசிகள் கணினி பயிற்சி மேற்கொள்ளும் வகையில், 20 கணிப்பொறிகள் கொண்ட கணினி பயிற்சி மையத்தை கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் தொடங்கிவைத்தார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...