காங்கேயம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய போதை இளைஞர்கள் - வைரல் வீடியோ

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வழிவிடாமல் சென்ற போதை இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. ஹாரன் அடித்தததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், அரசு பேருந்து ஓட்டுநரை நடுரோட்டில் வைத்து சராமரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



திருப்பூர்: ஈரோட்டில் இருந்து பழனிக்கு பழனி கிளையை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. பேருந்தை மேகநாதன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது அரச்சலூர் அருகே வடபழனி பகுதியில் இருந்து இளைஞர்கள் சிலர், போதையில் அரசு பேருந்திற்கு வழிவிடாமல் வந்ததாக கூறப்படுகிறது.

உரிய நேரத்தில் பேருந்தை இயக்க வேண்டும் என்பதால் பேருந்து ஓட்டுநர் இளைஞர்களின் வாகனங்களை நோக்கி ஹாரன் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே போதையில் இருந்த இளைஞர்கள் மீண்டும் பேருந்துக்கு வழி விடாமல் சென்றுள்ளனர்.



காங்கேயம் அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் நின்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து கிளம்பியபோது இருசக்க வாகனங்களில் பேருந்தை வழிமறித்த போதை இளைஞர்கள் சட்டை இல்லாமல் அரைகுறை ஆடையுடன் பேருந்தை நிறுத்த சொல்லி கலாட்டாவில் ஈடுபட்டனர்.



பின் பேருந்து ஓட்டுநரின் இருக்கைக்குச் சென்ற அந்த இளைஞர்கள், ஓட்டுநரான மேகநாதன் சட்டையைப் பிடித்து இழுத்து, நடுரோட்டில் வைத்து சராமாரியாக தாக்கியுள்ளனர்.

சம்பவத்தை பார்த்த பேருந்து பயணிகள், போதை இளைஞர்களிடமிருந்து அரசு பேருந்து ஓட்டுநரை மீட்டு அனுப்பி வைத்தனர். தாக்கப்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர் மேகநாதன், காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் , அந்த புகாரின் பேரில் போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கப்படுவதை பேருந்தில் இருந்த சக பயணி ஒருவர் எடுத்து வெளியிட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...