கோவையில் சிறுவனை பறவையை போல் கூண்டில் அடைத்து கொண்டு சென்ற நபர் - வீடியோ வைரல்!

உக்கடம் - ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தில் பறவைகள் கூண்டில் 5 வயது சிறுவனை அடைத்து கொண்டு சென்ற சம்பவம் குறித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் வைத்து கொண்டு பயணிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



கோவை: ஈச்சனாரி அருகே சிறுவனை கோழிகள் அடைக்கும் கூண்டில் வைத்து அழைத்து சென்ற சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.



கோவை மாவட்டம் உக்கடம் - ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிறிய ரக கூண்டிற்குள் சிறுவனை அமர வைத்தபடி இருசக்கர வாகனத்தை இயக்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.



அப்பகுதியில் டிவிஎஸ் XL சூப்பர் வாகனத்தை இளைஞர் ஒருவர் இயக்கும் நிலையில், வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார். வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ஒன்றில், சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்தபடி பயணித்துள்ளனர்.

இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை வைத்து பயணம் செய்ய கூடாது என வலைதளவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...