கோவை தெற்கு, மத்திய மண்டலங்களில் வளர்ச்சி பணிகள் - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில்‌ கழிவு வெளியேற்றும்‌ இடத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதியில்‌ சிசிடிவி கேமராக்களை பொருத்தி கழிவுநீர் வாகனங்களை கணிகாணிக்கவும்‌, சுற்றுசுவர்‌ அமைக்கும்‌ பணியை விரைவாக செய்து முடிக்கவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



தொடர்ந்து அதே பகுதியில்‌ உள்ள சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வெளியேற்றும்‌ நிலையத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, மழை காலங்களில்‌ மழைநீருடன்‌ கழிவுநீர் கலக்காமல்‌ தனியாக குழாய்‌ அமைத்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

மேலும் அதே பகுதியில்‌ உள்ள மக்கும்‌ குப்பைகளைக்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையத்தின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ அதிகாரிகளும் பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்தார்‌.



இதேபோல் கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குறிச்சி குளத்தில்‌ சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.52.16 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌ புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ சீர்மிகு நகர திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, டாடாபாத்‌ பகுதியில்‌ உள்ள மாநகராட்சி அறிவியல்‌ பூங்காவில்‌ நடைபெற்று வரும்‌ புனரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவில்‌ செய்து முடித்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார்‌.



பின்னர் கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின் கீழ்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ நடைபெற்று வரும்‌

மேம்பாட்டு பணிகளின்‌ ஒரு பகுதியாக வாகனங்களின்‌ பயனற்ற உதிரி பாகங்களை கொண்டு மறுசுழற்சி முறையில்‌ மாதிரி கார்‌, கிராமபோன்‌, அடி தண்ணர்‌ குழாய்‌, பழைய தொலைபேசி போன்றவை அமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...