ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவில் தொண்டர்களை அலறியடித்து ஓட வைத்த அதிமுக நிர்வாகிகள்

வால்பாறையில் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழாவின் போது அதில் பங்கேற்றிருந்த அதிமுகவினரிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தொண்டர் அலறியடித்து ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறையில் அதிமுக சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா தனியார் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.



இவ்விழாவிற்கு நகர கழக செயலாளர் மயில் கணேஷ் தலைமை வகித்தார். பொன்.கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, விவசாய அணி துணைச்செயலாளர் வழக்கறிஞர் சீதாராமன், ஜெபராஜ், அமீது ஆகியோர்கள் சிறப்புரை ஆற்றினர்.

இதைத்தொடர்ந்து ஜெபராஜ் பேசுகையில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவிற்கு இணையாக 301 ரூபாய் சம்பளம் பெற்றுத்தர வேண்டும் என்று சட்ட மன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசுவிடம் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து அமீது பேசுகையில், முன்னால் பேசிய பொன் கணேசும், ஜெபராஜும் பேசியது தவறு என்று சுட்டிக்காட்டினார். இதைத்தொடர்ந்து, நாங்கள் என்ன தவறாக பேசினோம் என்று இருதரப்பினர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதில் நாற்காலிகளை தூக்கி எறிந்து மோதல் ஏற்பட்டதால் தொண்டர்கள் அலறியடித்து ஓடினர். சில மணிநேரம் கழித்து மீண்டும் கூட்டம் துவங்கியது. 

இதில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில், தமிழகத்தில் நிலையான அரசு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நாங்கள் கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கியிருந்து 122 சட்டமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம்.

இனி வரும் காலங்களில் ஜெயலலிதாவின் வழியிலேயே பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படும். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 250 பேருக்கு ஒருவாரத்தில் இலவச பட்டா வழங்கி அரசு மாணியத்தில் வீடு கட்டித்தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளாவுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் போல செயல்பட வேண்டும்" என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த விழாவில் நரசப்பன், வழக்கறிஞர் பெருமாள், கோழிக்கடை சண்முகம், மிச்சர் முருகன், சசி, மோகன், செல்வகணேஷ், நெல்லைச்செல்வன் ஆகியோர்களும் கட்சி தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...