கோவை மாநகராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்க 44 தள்ளு வண்டிகள் வழங்கல்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் ரூ.9,86,480 மதிப்பீட்டில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான பிளாஸ்டிக்‌ 176 புதிய குப்பைத்‌ தொட்டிகளுடன்‌ கூடிய 44 தள்ளுவண்டிகளை 20 வார்டுகளுக்கு உட்பட்ட தூய்மைப்‌ பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளுக்கு குப்பை சேகரிப்பதற்கான தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ ரூ.9,86,480 மதிப்பீட்டில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான இருவகை பிளாஸ்டிக்‌ 176 புதிய குப்பைத்‌ தொட்டிகளுடன்‌ கூடிய 44 தள்ளுவண்டிகளை 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மைப்‌ பணியாளர்களுக்கு வழங்கினா்.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாயாளா்‌ க.சிவகுமார்‌, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



அதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வாடு எண்‌.19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ ரூபாய்‌ 99 லட்சத்து 10 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமான பணியினை மேயர்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்‌,



மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ ரூ.83 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ ஆய்வகம்‌ கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



மேலும்‌, அப்பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திலுள்ள கழிப்பிடத்தை புனரமைத்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம்‌, மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில்‌ காட்டுப்பள்ளிக்கூடம்‌ 33 சதவீதம்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 வகுப்பறைகளின்‌ மராமத்து பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...