கோவை மாநகராட்சியில் குப்பைகளை தரம்பிரிக்க 44 தள்ளு வண்டிகள் வழங்கல்!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில் ரூ.9,86,480 மதிப்பீட்டில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான பிளாஸ்டிக்‌ 176 புதிய குப்பைத்‌ தொட்டிகளுடன்‌ கூடிய 44 தள்ளுவண்டிகளை 20 வார்டுகளுக்கு உட்பட்ட தூய்மைப்‌ பணியாளா்களுக்கு வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளுக்கு குப்பை சேகரிப்பதற்கான தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ ரூ.9,86,480 மதிப்பீட்டில்‌ மக்கும்‌ மற்றும்‌ மக்கா குப்பைகளை வகைப்படுத்தி பிரிப்பதற்கான இருவகை பிளாஸ்டிக்‌ 176 புதிய குப்பைத்‌ தொட்டிகளுடன்‌ கூடிய 44 தள்ளுவண்டிகளை 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மைப்‌ பணியாளர்களுக்கு வழங்கினா்.



இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி துணை ஆணையாயாளா்‌ க.சிவகுமார்‌, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, பொதுசுகாதாரக்‌ குழுத்தலைவர்‌ பெ.மாரிச்செல்வன்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்கள்‌.



அதனைத்தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வாடு எண்‌.19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ ரூபாய்‌ 99 லட்சத்து 10 ஆயிரம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ கட்டுமான பணியினை மேயர்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்‌,



மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ ரூ.83 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ ஆய்வகம்‌ கட்டப்படவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



மேலும்‌, அப்பகுதியிலுள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாகத்திலுள்ள கழிப்பிடத்தை புனரமைத்து விரைவில்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்ட பின்னர்,



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.11க்குட்பட்ட சின்னவேடம்பட்டி, சிவானந்தபுரம்‌, மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில்‌ காட்டுப்பள்ளிக்கூடம்‌ 33 சதவீதம்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.24 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 வகுப்பறைகளின்‌ மராமத்து பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்து விரைவில்‌ மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...