கோவை மாநகரில் அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைத்திட வலியுறுத்தி பிரச்சார பயணம்!

கோவை மாநகரில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் கோவையில் ஒரு நாள் பிரச்சார பயணம் நடைபெற்றது. இதனை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் அம்பேத்கரின் முழு உருவச் சிலையை அமைக்க வலியுறுத்தி சமூக நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் ஒரு நாள் பிரச்சார பயணம் நடைபெற்றது.

கோவை காந்திபுரம் தந்தை பெரியார் திராவிட கழக அலுவலகம் முன்பு துவங்கப்பட்ட இந்த பிரச்சார பயணத்தை தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் துவக்கி வைத்தார்.



இந்தப் பிரச்சார பயணத்தில் கோவை மாமன்ற தீர்மானத்தின்படி செஞ்சிலுவை சங்கம் அருகில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவசிலை அமைத்திட வேண்டும், அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டெடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும். துப்புரவு தூய்மை பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்து அரசு நிர்ணயிக்க கூடிய கூலியை கொடுத்திட வேண்டும்.

ஆணவ படுகொலைகளை தடுத்திட தனி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். பொது தண்ணீர் தொட்டி பொது சுடுகாடு சமத்துவபுரம் என்ற நிலையினை உருவாக்கிட வேண்டும். அரசு பணியாளர் காலி இடங்களை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் அனைவருக்கும் கிடைத்திட ஒன்றிய அரசும் மாநில அரசும் உறுதியளித்திட வேண்டும். தமிழகம் எங்கும் இருக்கும் அம்பேத்கர் சிலையை சுற்றியுள்ள இரும்பு வேலிகளை அகற்றி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தபட்டது.

இந்த பிரச்சார பயணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல அமைப்புச் செயலாளர் சு.சி.கலையரசன் ஒருங்கிணைத்தார். இதில் சி.பி.எம், ஆதித்தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

கோவை மாநகரில் இன்று மாலை வரை இந்த பிரச்சார பயணம் வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...