வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை - தாராபுரத்தில் பாமக சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்!

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் அனுப்பும் போராட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமகவினர், 1000 தபால்களை தபால் நிலையம் மூலம் முதலமைச்சருக்கு அனுப்பிவைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 1,000 கடிதங்களை அனுப்பினர்.



இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. மாவட்ட செயலளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தார். முன்னதாக 50-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், முதல் கட்டமாக ஆயிரம் கடிதங்கள் அனுப்பியுள்ளோம். மீண்டும் வரும் 31-ந் தேதிக்குள் 4 ஆயிரம் கடிதங்கள் அனுப்ப உள்ளோம், என்றார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...