கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் கிடந்த 5 வயது குட்டி யானையின் எலும்புக்கூடுகள் - வனத்துறை விசாரணை!

கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் வனத்துறை ரோந்து பணியின் போது யானையின் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட நிலையில், கால்நடை மருத்துவர் குழுவுடன், வனத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இறந்தது சுமார் 5 வயதுடைய குட்டி ஆண் யானை என்பதும், இறந்து சுமார் 4 மாதங்கள் இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.


கோவை: கோவை தேவராயபுரம் வனப்பகுதியில் 5 வயது ஆண் குட்டி யானை மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போளுவாம்பட்டி வனச்சரத்திற்கு உட்பட்ட நரசீபுரம் அருகே உள்ள தேவராயபுரம் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஒரு பகுதியில் இறந்த யானையின் மண்டை ஓடு மற்றும் சிதறிய எலும்புகள் கண்டறியப்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.



கால்நடை மருத்துவர் குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, இறந்தது சுமார் 5 வயதுடைய ஆண் யானை குட்டி என்பதும், இறந்து சுமார் 4 மாதங்கள் இருக்கலாம் எனவும் கண்டறியப்பட்டது.

யானையின் எலும்புக்கூடு, தந்தம் அதே பகுதியில் சிதறி கிடந்துள்ளது. இறந்து நீண்ட நாட்கள் ஆனதால் யானையின் இறப்புக்கான காரணம் குறித்து கண்டறிய முடியவில்லை என மருத்துவர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...