கோவையில் இருந்து கேரளாவுக்கு 5.9 டன் ரேசன் அரிசி கடத்தி சென்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிப்பு!

கோவையில் இருந்து கேரளாவிற்கு 5.9 டன் ரேசன் அரிசியை கடத்தி சென்ற சிவானந்தா காலணி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (48) என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் இருந்து கேரளாவிற்கு 5.9 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற நபருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 2008ஆம் ஆண்டு கோவை - பாலக்காடு சாலை குனியமுத்தூர் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக கேரளாவிற்கு ஈச்சர் லாரி மூலம் ரேசன் அரிசியை கடத்தியதாக கோவை சிவானந்தா காலணி பகுதியை சேர்ந்த அன்வர் பாஷா (48), உக்கடம் பகுதியை சேர்ந்த ஆலிப்ராஜா ஆகிய இருவரை கைது செய்து, அவரிடமிருந்து 5.9 டன் ரேசன் அரிசி மற்றும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், முதல் குற்றவாளியான அன்வர் பாஷாவிற்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆலிப்ராஜா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதே போல இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட காளிதாஸ் (43), ரவிராஜ் (43) ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அன்வர் பாஷா மீது 8 மாவட்டங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...