மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளராக கார்த்திக் நியமனம் - தாராபுரத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு

தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கார்த்திக்கிற்கு மூலனூரில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கார்த்திக்கை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.


திருப்பூர்: தி.மு.க. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளராக எஸ்.கார்த்திக் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவர் திருப்பூர் தெற்கு மாவட்டம் மூலனூர் ஒன்றிய அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தார்.



அப்போது, திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க கார்த்திக்கை கடைவீதி பகுதியில் ஊர்வலமாக அழைத்து வந்து வரவேற்பு கொடுத்தனர்.



இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மூலனூர் (மேற்கு) ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு, மூலனூர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி தலைவருமான தெண்டபாணி,

கன்னிவாடி பேரூர் செயலாளர் சுரேஷ், குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...