காசி தமிழ்சங்க யாகத்தில் பங்கேற்ற தாராபுரம் ஆன்மீகக் குழு - இயமலை, ரிஷிகேஷ்-க்கும் சுற்றுப்பயணம்!

தாராபுரத்திலிருந்து முதல் முதலாக 40 பேர் கொண்ட குழு, காசி தமிழ் சங்க ஆன்மீக யாத்திரை சென்றுவந்துள்ளது. சாரதாஸ் எஸ். சண்முகவேல் தலைமையில் சென்ற இந்தக் குழுவில், பாஜக மாவட்ட துணைத்தலைவர் செல்வா பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காசி தமிழ் சங்கம் குழுவின் தலைவர் சாரதாஸ் எஸ். சண்முகவேல் தலைமையில் 40 பேர் கொண்ட குழு முதன் முதலாக காசி தமிழ் சங்கம் ஆன்மிக யாத்திரை சென்றது.

இந்த குழுவினர் கடந்த 15-ந் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் ரிஷிகேஷ் பகுதியான இமயமலைக்கு சென்றனர். பின்னர் கங்கை நதியில் புனித நீராடினர். பிறகு காசி தமிழ் சங்க யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்தனர்.

பிறகு தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக கங்கை நதியின் புனித நீரை தீர்த்தமாக எடுத்து கொண்டு வந்தனர். ஆன்மிக பயணத்தின் போது இமயமலை, ரிஷிகேஷ், ஹரித்துவார், புது டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தனர்.

காசி தமிழ் சங்கம் யாகத்தில் தாராபுரத்தில் இருந்து பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் செல்வா பழனிச்சாமி, அ.தி.மு.க. தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.செல்வகுமார், த.மா.கா.வட்டார தலைவர் காளிதாஸ், கொங்கு முன்னேற்ற கழக நகர செயலாளர் சின்னசாமி, ரோட்டரி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், மல்லி ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குனர் அர்சுணன் உள்ளிட்ட 40 பேர் ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...