காசி தமிழ்சங்க யாகத்தில் பங்கேற்ற தாராபுரம் ஆன்மீகக் குழு - இயமலை, ரிஷிகேஷ்-க்கும் சுற்றுப்பயணம்!

தாராபுரத்திலிருந்து முதல் முதலாக 40 பேர் கொண்ட குழு, காசி தமிழ் சங்க ஆன்மீக யாத்திரை சென்றுவந்துள்ளது. சாரதாஸ் எஸ். சண்முகவேல் தலைமையில் சென்ற இந்தக் குழுவில், பாஜக மாவட்ட துணைத்தலைவர் செல்வா பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காசி தமிழ் சங்கம் குழுவின் தலைவர் சாரதாஸ் எஸ். சண்முகவேல் தலைமையில் 40 பேர் கொண்ட குழு முதன் முதலாக காசி தமிழ் சங்கம் ஆன்மிக யாத்திரை சென்றது.

இந்த குழுவினர் கடந்த 15-ந் தேதி கோவையிலிருந்து விமானம் மூலம் ரிஷிகேஷ் பகுதியான இமயமலைக்கு சென்றனர். பின்னர் கங்கை நதியில் புனித நீராடினர். பிறகு காசி தமிழ் சங்க யாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்தனர்.

பிறகு தாராபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக கங்கை நதியின் புனித நீரை தீர்த்தமாக எடுத்து கொண்டு வந்தனர். ஆன்மிக பயணத்தின் போது இமயமலை, ரிஷிகேஷ், ஹரித்துவார், புது டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தனர்.

காசி தமிழ் சங்கம் யாகத்தில் தாராபுரத்தில் இருந்து பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் செல்வா பழனிச்சாமி, அ.தி.மு.க. தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.செல்வகுமார், த.மா.கா.வட்டார தலைவர் காளிதாஸ், கொங்கு முன்னேற்ற கழக நகர செயலாளர் சின்னசாமி, ரோட்டரி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், மல்லி ரெஸ்டாரன்ட் நிர்வாக இயக்குனர் அர்சுணன் உள்ளிட்ட 40 பேர் ஆன்மிக பயணத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...