கோவையில் ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் - ஏராளமான விவசாயிகள் பங்கேற்பு!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சியரிடம் அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், இணை இயக்குநர் வேளாண்மை முத்துலட்சுமி,தோட்டக்கலை துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், நிலத்தடி நீர் உயர்த்திட நடவடிக்கை, பாலம் கட்டுதல், சாலைகள் சரி செய்தல், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.



தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக பயிர் பாதுகாப்புத்துறை சார்பில் தென்னை வாடல் நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கமாகவும் மற்றும் வனவியல் துறை சார்பில் காட்டு பன்றியினால் ஏற்படும் வேளாண் விளைபொருள் சேதத்தை தடுக்கும் முறைகளும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் தென்னை வாடல் நோய் சம்பந்தமாகவும் வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் சம்பந்தமாகவும், கொப்பரை கொள்முதல் சம்பந்தமாகவும், கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தெரிவித்தனர்.

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றவும், மேற்கு சித்திரை சாவடி பாசன மதகுகளை சரி செய்யவும், நொய்யல் ஆற்றில் கழிவு மற்றும் மாசு கலப்பதை தடுக்கவும். கொப்பரை கொள்முதல் விலையை அதிகப்படுத்தவும், கனிமவள கடத்தலை தடுக்கவும். குளப்பத்துகுளம் பாசன சபை அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் மலர், காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு தனி மார்க்கெட் அமைத்து தரவும், அங்கக உர மேலாண்மையை மேம்படுத்தவும், வாழை பயிருக்கு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள்கோரிக்கை வைத்தனர்.

Newsletter

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...