பல்லடத்தில் பயங்கரமாக மோதிக்கொண்ட 2 பேருந்துகள் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

பல்லடம் பேருந்து நிலையம் அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனியார் பேருந்து மீது அரசு பேருந்து வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


திருப்பூர்: பல்லடத்தில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்றுமுன்தினம் பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து வலது புறமிருந்த பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் நுழைய திரும்பியுள்ளது.

அப்போது கோவையிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலிருந்த பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...