வால்பாறையில் எம்ஜிஆர் தோட்ட தொழிற்சங்க சார்பில் தொழிலாளர்களுக்கு நிதியுதவி

வால்பாறையில் மே தினத்தை ஒட்டி நடந்த தொழிற்சங்கங்களின் பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம் சார்பில் 40 நலிந்த தொழிலாளர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கங்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடத்தின.



இதில் ஒரு பகுதியாக எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம், வால்பாறை அமீது தலைமையில் 40 நலிந்த தொழிலாளர்களுக்கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

எம்ஜிஆர் தேயிலைத் தோட்ட தொழிற்சங்கம் 34 ஆம் ஆண்டு துவக்க விழாவில் தொழிலாளர்களுக்கு எம்ஜிஆர் தொழிற்சங்க அலுவலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 62 எஸ்டேட் பகுதிகளில் இருந்து தோட்ட தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



மே தினம் கொண்டாடும் வகையில் 40 தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

தற்போது அரசு அறிவித்த 450 ரூபாய் சம்பளம் வழங்காமல் தற்போது தொழிலாளர்களுக்கு 425 ரூபாய் நிர்வாகம் சம்பள வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து இழுவை தொகையை திரும்ப வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு தொழில் வரியை ரத்து செய்ய வேண்டும், அரசு அறிவித்த 450 ரூபாய் சம்பளம் வழங்க தமிழ்நாடு அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று வால்பாறை அமீது தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...