நம்ம ஊரு சூப்பரு - கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்!

நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரத்தை மே 1முதல் ஜுன் 15 வரை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், NCC மற்றும் NSS மாணவர்களை கொண்டு பெரிய அளவிலான துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.


கோவை: நம்ம ஊரு சூப்பரு பிரச்சாரத்தை மே 1முதல் ஜுன் 15 வரை செயல்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பஷீர் அகமது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், கமலகண்ணன், மாவட்ட மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் இதர களப்பணியாளர்களுக்கு பிரச்சாரம் மற்றும் அதன் நோக்கங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு வாரியாக குப்பை கொட்டும் இடங்களை அடையாளம் காணும் பணிகளில் பொதுமக்களை ஈடுபடுத்த வேண்டும். தூய்மை காவலர்கள், தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள், NCC மற்றும் NSS மாணவர்களை கொண்டு பெரிய அளவிலான துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வீடுகள், அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து தோட்டங்களை அமைக்க ஊக்குவிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை தளங்களை சுற்றிலும் மரக்கன்றுகளை நடவேண்டும். காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்ட பள்ளிகளில் ஊட்டச்சத்து பூங்கா அமைக்க வேண்டும்.

மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை திறம்பட அப்புறப்படுத்த சுகாதாரமான குப்பை கிடங்குகளை பயன்படுத்த வேண்டும். போதிய இடவசதி இல்லாத அல்லது அதிக அளவில் மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகள் உள்ள ஊராட்சிகளில், ஒன்றிய அளவில் கூடுதல் இடங்கள் கண்டறியப்பட வேண்டும்.

ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டபிற பிரதிநிதிகளுடன் ஒருங்கிணைந்து மாபெரும் துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களிடையே பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

இந்த பிரச்சாரத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...