கோவையில் வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் - மர்ம நபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே பாலதண்டாயுதபாணி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு நாயை, கற்களாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் மீது, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை காளப்பட்டி அருகே வளர்ப்பு நாயை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்மநபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காளப்பட்டி பாலாஜி நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (48). இவர் தனது வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலதண்டாயுதபாணி வீட்டு வளாகத்திற்குள் புகுந்து அவரது வளர்ப்பு நாயை கட்டை மற்றும் கல்லால் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

நாயின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது மர்ம நபர் நாயை தாக்கி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாலதண்டாயுதபாணி பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் அடிப்படையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயை கொடூரமாக தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...