வால்பாறையில் குழந்தைகள் காப்பகம், கோயிலை சேதப்படுத்திய யானைகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புப் பகுதியில் புகுந்த 4 காட்டு யானைகள், அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், ரேஷன் கடை, கோவில் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நான்கு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.



அப்போது, அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், கோவில், நியாய விலை கடை, எஸ்டேட் பொருட்கள் வைக்கும் அறை ஆகியவற்றின் ஜன்னல், கதவு, சுவர், உள் இருந்த பொருட்கள் போன்றவற்றை உடைத்து சூறையாடின.



பின்னர் அந்த காட்டு யானைகள், எஸ்டேட் வாகனத்தின் மூலம் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.



காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் வனத்துறையினர் தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...