கோவை பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதல் - கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சோகம்!

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆதித்யா (18), முகேஷ்வரன் (19) ஆகியோர் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதியதில் இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அக்ரகாரம் சிவாஜி நகரை சேர்ந்த காந்தி என்பவரது மகன் ஆதித்யா (18), இதேபோல், அவதானப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் முகேஷ்வரன் (19 ). இருவரும் கோவை ஒத்தக்கால்மண்டபம், பிரீமியர் மில்ஸ் பகுதியில் அறை எடுத்து தங்கி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆதித்யா மற்றும் முகேஸ்வரன் ஆகிய இருவரும் அவர்கள் நண்பர்களோடு பைக்கில் எல்.அன்.டி நெடுஞ்சாலையிலிருந்து பாலத்துறை நோக்கி சென்றனர். அப்போது ஆதித்யா பைக்கை ஓட்டியுள்ளார்.

இந்நிலையில், பாலத்துறை அருகே உள்ள தனியார் தொழிற்சாலை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்திலிருந்த மின் கம்பம் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த இருவரையும் அவர்களது நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...