கோவை பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதல் - கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சோகம்!

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆதித்யா (18), முகேஷ்வரன் (19) ஆகியோர் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் சென்றபோது பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதியதில் இருவரும் மருத்துவமனை செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர்.


கோவை: பாலத்துறை அருகே மின்கம்பம் மீது பைக் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அக்ரகாரம் சிவாஜி நகரை சேர்ந்த காந்தி என்பவரது மகன் ஆதித்யா (18), இதேபோல், அவதானப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் முகேஷ்வரன் (19 ). இருவரும் கோவை ஒத்தக்கால்மண்டபம், பிரீமியர் மில்ஸ் பகுதியில் அறை எடுத்து தங்கி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று ஆதித்யா மற்றும் முகேஸ்வரன் ஆகிய இருவரும் அவர்கள் நண்பர்களோடு பைக்கில் எல்.அன்.டி நெடுஞ்சாலையிலிருந்து பாலத்துறை நோக்கி சென்றனர். அப்போது ஆதித்யா பைக்கை ஓட்டியுள்ளார்.

இந்நிலையில், பாலத்துறை அருகே உள்ள தனியார் தொழிற்சாலை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்திலிருந்த மின் கம்பம் மீது மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், படுகாயமடைந்த இருவரையும் அவர்களது நண்பர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...