கோவை மாவட்டத்தில் 38 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்


பிளஸ்-2 தேர்வு தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வரும் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் இருந்து 38 ஆயிரத்து 218 மாணவர்கள் எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 346  பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். கோவை கல்வி மாவட்டத்தில் 72, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 23 என மொத்தம் 95 தேர்வு மையங்களில் சுமார் 1800 தேர்வு அறைகளில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 303 பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தேர்வு நடக்கும் மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 

மேலும், பிளஸ்-2 தனித் தேர்வை கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து மற்றும் தட்கலில் விண்ணப்பித்தவர்கள் என மொத்தம் 2273 தனித் தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...