ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு கோவையில் விண்ணப்பங்கள் விநியோகம் 6ம் தேதி துவக்கம்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதல்களின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்- 2 முறையே 2017 ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோவை மாவட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலரால் வரும் மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர விநியோகம் செய்யப்பட உள்ளது.

இந்த விண்ணப்பங்களை பெற கட்டணமாக ரூ.5 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படும்.

இதுகுறித்தான மேலும் தகவலுக்கும் விற்பனை மையங்கள் தொடர்பாக அறிந்துகொள்ளவும், மாவட்ட வாரியான விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கோவை மாவட்டத்தில், முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள வின்சென்ட் சாலையில் செயல்பட்டு வரும் நல்லாயன் உயர்நிலைப் பள்ளி மற்றும் பாலக்காடு சாலையில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், மாவட்ட கல்வி அலுவலகத்தில் வரும் 6ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர திரும்பப் பெறப்படும்.

விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...