வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைக்க கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டிடம் மற்றும் கழிப்பிடம் அகற்றம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேற்கு மண்டலம், வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகள் கொண்ட பழைய வணிக வளாக கட்டிடம் மற்றும் பழைய கழிப்பிடங்கள் இன்று (1.03.2017) அகற்றப்பட்டு வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வடவள்ளியில் பேருந்துகள் நிறுத்துமிடம் உள்ளது. பேருந்துகள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால், உத்தேச பேருந்து திருப்புமுனையம் போதுமான வகையில் பேருந்துகள் இடையூரின்றி நுழையும் வசதி மற்றும் வெளியேறும் வசதி ஏற்படுத்தும் வகையில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமையும் நுழைவாயிற் பகுதியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் சர்வே செய்து அப்புறப்படுத்தவும், பேருந்துகள் நுழைவுப் பகுதியிலுள்ள மிகப்பழமையான கழிப்பிடங்களையும் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான சிறு கடைகளையும் அகற்றி மாற்று ஏற்பாடு செய்தும், பேருந்து நிலையம் உள்பகுதியில் நுழைய இடவசதி ஏற்படுத்தும்படியும் திட்டமிட்டு, வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான பணிகள் வரைவில் மேற்கொள்ளப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தோம். 



அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக கடந்த 20.01.2017 அன்று மேற்கு மண்டல உதவி ஆணையர் கே.ராமைய்யா, உதவி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் வடவள்ளியில் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக நுழைவாயிற் பகுதியில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புக் கடைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு அகற்றப்பட்டு, புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தற்பொழுது அதன் தொடர்ச்சியாக இன்று (மார்ச் 1) வடவள்ளியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 8 கடைகள் கொண்ட பழைய வணிக வளாக கட்டிடம் மற்றும் பழைய கழிப்பிடங்கள் காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு, பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கு நுழைவாயிற் பகுதியாக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால் திருப்புமுனையத்திற்கு வருகின்ற பொது மக்கள் இடையூறு இல்லாமல் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் வந்து செல்வதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இடையர்பாளையம் சாலை மற்றும் மருதமலை சாலை சந்திப்பு பகுதி விஸ்தரிக்கப்பட்டு, சாலை அகலப்படுத்தியும் புதிய உத்தேச பேருந்து திருப்புமுனையம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது" என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...