கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய தாதாவுக்கு வலைவீச்சு - மும்பையில் முகாமிட்டுள்ள தனிப்படை!

கோவையில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் தருவது, ஜாமீனில் எடுப்பது போன்ற உதவிகளை செய்து வந்த பிரபல தாதா தில்லி என்பவரை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவையில் பல்வேறு குற்றச்சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக கருதப்படும் தாதாவை தேடி கோவை தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு படுகொலை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் ரவுடி கோஷ்டிகளுக்கும், கஞ்சா விற்பனையாளர்களும் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை ஒடுக்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாகமாநகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்தவர்கள், தொடர்ந்து குற்றங்கள் ஈடுபடுவோர் என 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான குற்றவாளிகள் பலரது பின்னணியில் தில்லி என்ற மர்ம நபர் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இந்த நபர் கொலை செய்யும் ரவுடிகள், கஞ்சா விற்பனை செய்பவருக்கு பின்புலமாக இருந்து பண உதவி செய்து, தன் வளையத்திற்குள் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லும் ரவுடிகளுக்கு அடைக்கலம் தருவது அவர்கள் கைது செய்யப்பட்டால் வக்கீல் மூலம் ஜாமீன் எடுப்பது போன்ற வேலைகளையும் அந்த நபர் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த நபர் இதுவரை போலீசில் பிடிபடவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லி என்ற அந்த நபரை கைது செய்ய திட்டமிட்டகோவை தனிப்படை போலீசார் சென்னை, மும்பை நகரங்களில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...