மல்யுத்த சம்மேளன தலைவர் பதவி விலக கோரி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிட்ஜ் பூசன் சரன் சிங் மீது குற்றம்சாட்டி வீராங்கனைகள் 17 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பாலியல் குற்றசாட்டுக்கு ஆளாகியுள்ள மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிட்ஜ் பூசன் சரன் சிங் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கோவையில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அதற்கு நீதிகேட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் கடந்த 17 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களது போராட்டத்தை நசுக்க மத்திய அரசு காவல்துறை மூலம் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.



இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிட்ஜி பூசன் சரண் சிங் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி கவுன்சில் சார்பில் மத்திய தந்தி அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட கவுன்சில் பொதுச் செயலாளர் தங்கவேல், கோவை ஜில்லா மில் தொழிலாளர் சங்க செயலாளர் சிவசாமி, தமிழ்நாடு எ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி சந்திரன், பிரபா ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...