கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு - பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவையில் சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த செயின் பறிப்பு சம்பவம் நடந்தது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை இராமநாதபுரம், ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜவிபி.

அவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றுவிட்டு, மீண்டும் தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது, பின்னால் வந்த இரண்டு நபர்கள் திடீரென சரோஜாவிபி கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.

சுதாரித்துகொண்ட சரோஜாவிபி, தனது தங்க சங்கிலியை இருக்கமாக பிடித்துக்கொண்டு கூச்சலிட்ட நிலையில், சங்கிலி அறுந்து பாதி கொள்ளையர்களின் கையில் கிடைத்ததால் அங்கிருந்து கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இதனால் செய்வதவறியாது தவித்த சரோஜாவிபி, தனது கையில் இருந்த பாதி தங்க சங்கிலியுடன் கோவை இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதோடு, அந்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...