கேஎம்சிஎச்-யில் நரம்பு இடையீட்டு மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் இரண்டாவது ஆண்டு மாநாடு துவக்கம்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கேஎம்சிஎச்) நரம்பியல் மருத்துவர்கள் சமீப ஆண்டுகளாக ரேடியோலஜி தொழில்நுட்ப இடையீட்டு மருத்துவ முறைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு ரேடியோலஜி இடையீட்டுத் துறையும் மாறி வருகின்றன.

குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு அதிநவீன நரம்பு இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொள்ள, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், மருந்துகள் போன்றவையும் சமீபகாலத்தில் சுலபமாக கிடைக்கின்றன.

உலக அளவில் நிபுணர்கள் மேற்கொள்ளப்படும் நரம்பு மருத்துவ இடையீட்டு கதிர்வீச்சு மருத்துவ துறைமாறி வரும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப தகவல்களை அறிந்தும், அறிந்தவற்றை பிற மருத்துவர்களுடன் பகிர்ந்து கொண்டும் சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

இவற்றை இயக்கி வரும் கதிர்வீச்சியல் மற்றும் இடையீட்டியல்துறை தலைவர் மருத்துவர் மாத்யு செரியன், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் மார்ச் 2 முதல் மார்ச் 4, 2017 வரை நரம்பு பாதிப்பு சிகிச்சை சங்கத்தின் இரண்டாம் ஆண்டு மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சர்வதேச மாநாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ருஸ் பல்கலைக கழக மருத்துவ மையம் மருத்துவர் டெமட்ரியஸ் லேபேஜ், மருத்துவர் டொனால்ட் பிரான்சிஸ் டென்வர், இத்தாலியைச் சேர்ந்த மருத்துவர் எடராடோபொகார்டி, கனடாவைச் சேர்ந்த மருத்துவர் மயன்க்கோயல், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் மைக்கல் மாவாட், துருக்கியைச் சேர்ந்த மருத்துவர் நாசி கோசர், ஜெர்மனி சேர்ந்த மருத்துவர் ரெனே சாபட், மருத்துவர் ஹான்ஸ் ஹென்கஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இவர்களுடன் நரம்பியல் கதிவீர்ச்சில் நிபுணத்துவம் பெற்ற 50 இந்திய மருத்துவர்கள், நரம்பியல் பிரிவு விரிவுரையாளர்கள், பங்கேற்று பயிற்சியும் கருத்தரங்களையும் நடத்தவுள்ளனர். 

நியுரோ இன்டர்வென்ஷன் துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சு துறையின் தலைவர் மருத்துவர் மேத்யு செரியன், இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளராக பொறுப்பேற்று நடத்துகிறார். 

இந்த ஆண்டு மாநாட்டின் துவக்க நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்கும் இத்தாலி, மிலன் நகரில் இருந்து வரும் மருத்துவர் எடராடோபொகார்டி, சர்வதேச அளவிலான விரிவுரை வழங்குகிறார். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் கற்றுத்தேர்ந்த அனுபவசாலி என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...