ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சார்பில் மார்ச் 5ம் தேதி புதிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் திறப்பு விழா

கோவை மாவட்டத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் இரண்டு பொறியியல் கல்லூரிகள், இரண்டு கலை அறிவியல் கல்லூரிகள், ஒரு பாலிடெக்னிக் கல்லூரியினை குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூரில் செயல்படுத்தி வருகிறது. இக்கல்லூரிகளில் 17 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 



இக்குழுமங்களின் கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு கல்வித் துறையில் பல்வேறு சாதனைகள் மற்றும் விருதுகளை பல்வேறு நிறுவனங்களில் பெற்று முதன்மையாக திகழந்து வருகிறது. மேலும், கோவை மற்றும் அதன் சுற்று வட்டராங்களில் பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இந்நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி இக்கல்வி நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறார்.

தற்போது, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் புதிதாக ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்டு, வருகின்ற மார்ச் 5-ம் தேதியன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இக்கோவில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் உடன் கணபதி, முருகன், பகவதி அம்மன் மற்றும் நவக்கிரகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப். 28 துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன. மார்ச் 5ம் தேதியன்று கும்பாபிஷேகம் மிகப் பிரமாண்ட அளவில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் குடுபத்தினருடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், இவ்விழா மற்றும் கோவிலை பற்றிய முழு விபரங்களை அறிய 0422-26784001-7 என்ற எண்ணிற்கோ அல்லது www.srikrishna.ac.in என்ற இணையதள முகவக்கோ தொடர்புகொள்ளலாம் என ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள இக்கல்விக் குழுமங்களின் பேருந்துகள் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்படுகின்றன.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...