கோவையில் மாயமான சிறுமி ஶ்ரீநிதி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மீட்பு

கோவை ஒண்டிபுதூரில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி ஶ்ரீநிதி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இரவு மீட்கப்பட்டு, கோவைக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில் பெற்றோர் திட்டியதால் சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் மாயமான 12 வயது சிறுமி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டார்.

கோவை ஒண்டிப்புதூர் திப்பே கவுண்டன் வீதியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி சசிகலா (38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சசிகலா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் ஸ்ரீநிதி (12) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஸ்ரீநிதி வீட்டின் அருகே தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்து மாயமாகி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகரன் மகள் மாயமானது குறித்து சசிகலாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த சசிகலா சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் தேடியும் ஸ்ரீநிதி கிடைக்காத நிலையில், கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை இரண்டு தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை சமூக வலைதளங்களில் மூலம் அனுப்பி சிறுமி பார்த்தால் தகவல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை மீட்ட போலீசார் கோவை அழைத்து வருகின்றனர். வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் சிறுமி வெளியேறியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...