கோவை சிறுமியின் புகைப்படத்தை பகிர வேண்டாம்..! - பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்

கோவையில் மாயமாகி பொள்ளாச்சியில் மீட்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை, சிறுமியின் எதிர்காலம் கருதி பொதுமக்கள் சமூக வலைதளங்களில் இருத்து நீக்குமாறும், வரும் காலங்களில் சிறுமி காணாமல் போன செய்தியை பகிர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் மாயமாகி பொள்ளாச்சியில் மீட்கப்பட்ட சிறுமியை கண்டுப்பிடிக்க உதவியாக இருந்த பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று முன் தினம் மாயமானார். இதையடுத்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, 6 தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் மாயமான சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சிறுமி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமியை தனிப்படை போலீசார் கோவை அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் அதிகமாக செல்போன் பார்ப்பதாக கூறி சிறுமியின் தாய் திட்டியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிறுமி வீட்டில் இருந்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு, கோவையிலிருந்து பொள்ளாச்சி சென்றதாகவும், அங்கிருந்து பழனிக்கு சென்று முருகன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து கேரளா மாநிலம் கோழிஞ்சாபாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார். அங்கு அதிகளவு மழை பெய்ததால் அச்சமடைந்து மீண்டும் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார்.

பேருந்து நிலையத்திலிருந்த பயணியிடம் செல்போனை வாங்கி தனது தாயிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, பின்னர் சிறுமியை தனிப்படை செய்த போலீசார் மீட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோவை மாநகர் இ-1 காவல் எல்லைக்குட்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியில் கடந்த 17ஆம் தேதி காணாமல் போன ஸ்ரீநிதி என்ற 12 வயதுடைய சிறுமியை விரைவாக கண்டுபிடிக்க வேண்டி நல்லெண்ண அடிப்படையில், அவரது புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

மேற்படி காணாமல் போனது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணையில், அச்சிறுமியை 18ஆம் தேதி பொள்ளாச்சியில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேற்படி சிறுமி எதிர்காலம் கருதி அவர் காணாமல் போனது தொடர்பாக அவரது புகைப்படத்துடன் பகிரப்பட்ட பதிவுகளை சமூக வலைதளங்களில் இருந்து பொதுமக்கள் தாங்களாகவே நீக்கி கொள்ளுமாறும், வரும் காலங்களில் சிறுமி காணாமல் போன செய்தியை பகிர வேண்டாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...