கோவையில் இரவு நேரங்களில் உலா வரும் பைக் திருடர்கள் - அச்சத்தில் பொதுமக்கள்!

விளாங்குறிச்சி ரோடு சேரன் மாநகரில் உள்ள வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: வெள்ளலூர் அருகே வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளலூர் பகுதியை சேர்ந்த அந்தோணிதாஸ் என்பவரது மகன் ஜெபா டானியல் (28). இவர் கோவை விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வளர்ப்பு மீன் கடை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி ஜெபாடேனியல் வழக்கம் போல தனியார் வணிக வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, முதல் தளத்தில் உள்ள தன்னுடைய கடைக்குச் சென்றுள்ளார். இரவு முழுவதும் அங்கிருந்த ஜெபடானியல் மறுநாள் மதியம் கீழே வந்து பார்த்தபோது, அவரது இரு சக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதல் கட்டமாக அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.



அப்போது அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் வந்த மூன்று இளைஞர்கள், ஜெபா டானியலின் இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. 

இந்நிலையில் இருசக்கர வாகனங்களை திருடும் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...