விரைவில் அமலாகிறது ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு கட்டாய ஆதார் எண்

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டம் விரைவில் அமலாகும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய எண்ணிக்கைகளில் ரயில்வே டிக்கெட்டுகளை புக் செய்வதை தடுப்பதும், மோசடியான டிக்கெட் முன்பதிவுகளையும், ஆள்மாறாட்டத்தையும் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். மூத்த குடிமக்கள் ரயில் டிக்கெட்டுகளுக்கான சலுகைகளைப் பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது, இதற்கான 3 மாத வெள்ளோட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 2017-18-க்கான புதிய வர்த்தக திட்டத்தை வெளியிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் திட்டத்துடன், நாடு முழுதும் ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 6,000 பி.ஓ.எஸ் இயந்திரங்களையும், நாடு முழுதும் 1,000 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் பணமற்ற பரிவர்த்தனையை வளர்க்கும் விதமாக ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப் ஒன்றையும் மே மாதம் அறிமுகம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஐஆர்சிடிசி இணையத்தில் ஒருமுறை பதிவாக ஆதார் எண் கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் மூலம் போலி அடையாள அட்டைகள் மூலம் பெரிய அளவில் டிக்கெட்டுகளை பிளாக் செய்வது தடுக்கப்படும்” என்று மூத்த ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்காக ரயில்வே மென்பொருள் ஒன்றையும் ரயில்வே துறை தயாரித்து வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். மேலும் இந்த புதிய வர்த்தகத் திட்டத்தில் மலைவாசஸ்தலங்களை இணைக்க புதிய சுற்றுலா ரயில்களை அறிமுகம் செய்யவும் முடிவெடுத்துள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...