வால்பாறையில் 3வது நாள் யானைகள் கணக்கெடுப்பு பணி - வனச்சரகர், வன அலுவலர்கள் பங்கேற்பு!

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வனப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 3வது நாளான இன்று கோவை வால்பாறையில் உள்ள நீர்நிலை பகுதிகளில் உள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


கோவை: யானைகள் குறித்த 3வது நாள் கணக்கெடுக்கும் பணியில் இன்று, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் உடுமலை அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்களில் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர் தலைமையில் வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 34 குழுக்களாக 136 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் நேரடியாக யானைகளை பார்ப்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேரடியாக யானைகளை கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இதில் இன்று மூன்றாவது நாளாக வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனசரகங்களில் நீர் நிலை பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.



இதில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் நீரார் அணை பகுதியில் யானைகள் நடமாட்டத்தை யானைகள் உள்ளதை கணக்கெடுத்தனர்.



அதேபோல் வால்பாறை வனச்சகர் வெங்கடேஷ் தலைமையில் அக்கா மலை வனப்பகுதிக்குள் நீர்நிலை அருகில் யானைகள் நடமாட்டம் அறிந்து யானைகளின் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட யானை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...