வால்பாறையில் 3வது நாள் யானைகள் கணக்கெடுப்பு பணி - வனச்சரகர், வன அலுவலர்கள் பங்கேற்பு!

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வனப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 3வது நாளான இன்று கோவை வால்பாறையில் உள்ள நீர்நிலை பகுதிகளில் உள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


கோவை: யானைகள் குறித்த 3வது நாள் கணக்கெடுக்கும் பணியில் இன்று, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் உடுமலை அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்களில் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர் தலைமையில் வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 34 குழுக்களாக 136 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் நேரடியாக யானைகளை பார்ப்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேரடியாக யானைகளை கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இதில் இன்று மூன்றாவது நாளாக வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனசரகங்களில் நீர் நிலை பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.



இதில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் நீரார் அணை பகுதியில் யானைகள் நடமாட்டத்தை யானைகள் உள்ளதை கணக்கெடுத்தனர்.



அதேபோல் வால்பாறை வனச்சகர் வெங்கடேஷ் தலைமையில் அக்கா மலை வனப்பகுதிக்குள் நீர்நிலை அருகில் யானைகள் நடமாட்டம் அறிந்து யானைகளின் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட யானை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...