கர்நாடகாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியேற்பு - கோவையில் காங். கொண்டாட்டம்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இன்று ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுள்ளனர். இந்த வெற்றியை கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



கோவை: கர்நாடகாவில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவையும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அமைச்சரவையில் முதல் கட்டமாக 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.



காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



அதன்படி, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...