கர்நாடகாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியேற்பு - கோவையில் காங். கொண்டாட்டம்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இன்று ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுள்ளனர். இந்த வெற்றியை கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



கோவை: கர்நாடகாவில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவையும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அமைச்சரவையில் முதல் கட்டமாக 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.



காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



அதன்படி, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...