கோவை திறந்தவெளி சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிறைவாசிகளுக்கு கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.



கோவை: கோவை சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு ஒரு நாள் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிங்காநல்லுார் திறந்தவெளி சிறையானது 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் சிறைவாசிகள் அவர்களின் தண்டனை காலத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும் அதன் மூலம் வருவாய் ஈட்டவும் விவசாய தொழிலை முதன்மையாகக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். 

மேலும் அவர்களுக்கு கால்நடைகள் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய் உற்பத்தி செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். 



காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் உலக தேனீ வளர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை "கவின் தேனீ பண்ணை சார்பாக தேனீ வளர்ப்பு நிபுணர் ரஞ்சித்பாபு மூலம் சிறைவாசிகளுக்கு தேனீ வளர்ப்பு தொடர்பான தொழில்நுட்ப பயிற்சியும், அதனை விற்பனை செய்யும் முறைகள் குறித்து சிறைவாசிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...