கோவை அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது - 450 கிலோ அரிசி பறிமுதல்!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் கோவை - பாலக்காடு சாலை வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது, கேரள பதிவெண் கொண்ட காரில் 450 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் முயன்ற நபரை கைது செய்த போலீசார், அவரை வேவு பார்க்க வந்த மற்றொருவரையும் கைது செய்தனர்.



கோவை: கோவை மாவட்டம் வாளையார் அருகே ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு தலைவர் காமினி உத்தரவின் பேரில், கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கோவை - பாலக்காடு சாலை வாளையார் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கேரளா பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிகாப் (35) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.



இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வேவு பார்க்க வந்த கேஜி சாவடி பகுதியை சேர்ந்த பாஸ்கர் (25) என்பவரையும், போலீசார் மடக்கி பிடித்தனர். 

இவர்களிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பாஸ்கரன் என்பவர் மூலமாக போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவில் உள்ள கள்ளச் சந்தைக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. 

இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 450 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...