கோவை அருகே பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் - பல ஆண்டு கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!

ஆனைக்கட்டி மலைப்பகுதி 24.வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி பழங்குடியின கிராமத்தில் அரசு மற்றும் தனியார் உதவியுடன் பழங்குடியின மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. தங்களின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் பழங்குடியின மக்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது பல ஆண்டு கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதி 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவழி எனும் மலை கிராமத்தில் 1 குடும்பங்கள்  மட்டுமே உள்ளது. இந்த குக்கிராமத்தில், சாலை, தண்ணீர், மின்சாரம் ஆகிய வசதிகள் இருந்த போதும், பல ஆண்டுகளாக வீடுகள் மோசமான நிலையில் இருந்து வருகிறது.  இதனால் அக்கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜோஸ்வா என்ற பழங்குடிகள் நல செயற்பாட்டாளர், அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, அதிமுக ஆட்சியில் முதற்கட்டமாக 5 வீடுகள் கட்டப்பட்டன.

பின்னர் மற்ற பழங்குடி குடும்பங்களும் தங்களுக்கும் வீடுகள் கட்டித்தர உதவ வேண்டுமென ஜோஸ்வாவிடம் வலியுறுத்தப்பட்டது.



அதன் பேரில் 2வது கட்டமாக 7 வீடுகள் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று தமிழ்நாடு அரசு பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ரூ.3 லட்ச வழங்கப்பட்டு அந்த நிதி போதுமாக இல்லாத நிலையில், புராபெல் மற்றும் ராக் என்ற நிறுவனத்தின் உதவியுடன் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவுற்றது.

இந்த திட்டத்தின் மூலம் முடிவுற்ற 6 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று அந்த கிராமத்தில் நடைபெற்றது. இதில் புராபெல் வித்யா செந்தில்குமார் , ராக்  நிறுவன தலைவர் பாலசுந்தரம், மருத்துவர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இது குறித்து கண்டிவழி கிராம மக்கள் கூறியதாவது, பல ஆண்டுகள் நல்ல வீடுகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் ஜோஸ்வா மிகவும் கஷ்டப்பட்டு அரசு மற்றும் தனியார் உதவியுடன் வீடு கட்டி தந்துள்ளனர். 

தற்போது கட்டப்பட்டு உள்ள வீடு நன்றாக உள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான ஜோஸ்வாவிற்கு நன்றி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...