கோவையில் பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை கிடைக்காததால் திருப்பூர் விவசாயி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் அடுத்த அவிநாசியை சேர்ந்த பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்யும் விவசாயி வேலுச்சாமி, ரூ.70 மதிப்புள்ள தனது பட்டுக் கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில், ரூ.30க்கு கேட்டதால் ஆத்திரமடைந்த வேலுசாமி, பட்டுக்கூடுகளை அங்காடியின் முன்பு தரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.



கோவை: கோவை பாலசுந்தரம் சாலையில் பட்டுக்கூடு அங்காடியில் உரிய விலை கிடைக்காததால் விவசாயி ஒருவர் தனது பட்டுக்கூடுகளை தரையில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் பல ஆண்டு காலமாக பட்டு கூடு உற்பத்தி செய்து வருகிறார். வேலுச்சாமி உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுக்கூடு அங்காடியில் வைத்து ஏலத்திற்கு விடுவது வழக்கம்.

அப்படி இன்று வழக்கம் போல அவர் கொண்டு வந்த இரண்டாம் தர பட்டுக்கூடை ஏலத்திற்கு விட்ட பொழுது இடைத்தரகர்கள் கிலோ 30 ரூபாய்க்கு கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அவர் 70 ரூபாய்க்கு கொடுக்கப்படும் பட்டுக்கூடை 30 ரூபாய்க்கு தரமாட்டேன் என தெரிவித்துள்ளார். இதனால் இடைத்தரகர்கள் வாங்க மறுத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தனக்கு உரிய விலை கிடைக்காததால் கொண்டு வந்த பட்டுக்கூடை மீண்டும் கொண்டு சொல்ல மாட்டேன் எனக்கூறி பட்டுக்கூடை அங்காடி முன்பு கொட்டி தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் தனக்குரிய 70 ரூபாய் விலையை தர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இதற்கு பட்டுக்கூடு அங்காடியின் அதிகாரிகள் வேலுச்சாமி கொண்டுவந்த பட்டுக்கூடு பயனற்றது என்றும் இதை அவர் சொல்லும் விலைக்கு எடுக்க முடியாது என்றும், தரத்திற்கு ஏற்ற விலை தான் நிர்ணயம் செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...