கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், காவல்துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

கோவை துடியலூர் காவல் எல்லையில் இருந்து பிரித்து கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே காவல் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த புதிய காவல் நிலையத்தை தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி வைத்தும் தொடங்கி வைத்தார். 



தொடர்ந்து அங்குள்ள காவல் துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரேந்திரகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் குமார், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...