கோவை அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகள் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரிய தடாகம் பிரிவில் உள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய சின்ன தடாகம் குட்டவழி பகுதியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் தடாகம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரிய தடாகம் பிரிவு அருகே செங்கல் சூளையில் பழைய இரும்புகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை பெரிய தடாகம் பிரிவு பகுதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கே.பி.எஸ் சேம்பர்ஸ் என்ற பெயரில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இந்த சூளையானது தற்போது நீதிமன்ற உத்தரவினால் செயல்படாமல் உள்ளது.



இந்த நிலையில் அவரது செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகள் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாலமுருகன் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், செங்கல் சூளையில் இருந்த பழைய இரும்புகளை திருடியதாக சின்ன தடாகம் குட்டவழியை சேர்ந்த பாபு மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...