கோவை ஈஷா யோகா மையத்தில் மே.30ல் பராமரிப்பு பணி - ஆதியோகி சிலை மூடப்படும் என அறிவிப்பு!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில்‌ வரும்‌ மே 30ஆம்‌ தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால்‌ தியானலிங்கம்‌ மற்றும்‌ ஆதியோகி வளாகங்கள்‌ அன்றைய தினம்‌ மூடப்பட்டிருக்கும் என்பதால் பக்தர்கள்‌ அன்றைய தினம்‌ ஈஷாவிற்கு வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என ஈஷா நிறுவனம் அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



கோவை: ஈஷா யோகா மையத்தில் வரும் 30ஆம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்றைய தினம் பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில்‌ உள்ள ஈஷா யோகா மையத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகின்‌ பல்வேறு நாடுகளில்‌ இருந்தும்‌ மக்கள்‌ வருகை தருகின்றனர்‌. குறிப்பாக, தியானலிங்கம்‌. லிங்கபைரவி மற்றும்‌ ஆதியோகியை தரிசிப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர். 

இந்நிலையில்‌, ஆண்டுதோறும்‌ நடைபெறும்‌ பராமரிப்பு பணிக்காக ஈஷா வளாகம்‌ வரும்‌ மே 30-ஆம்‌ தேதி ஒரு நாள்‌ மட்டும்‌ மூடப்பட உள்ளது. 31-ஆம்‌ தேதி முதல்‌ பக்தர்கள்‌ வழக்கம்போல்‌ தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்‌.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...