ரயில்வே நடைபாதை இடத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு

கோவை, ரயில் நிலையம் வளாகம் ரயில் பாதை அருகே உள்ள 17-வது வார்டு, கடலைக்கார சந்து 3-வது வீதி இந்திரா நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் 50 குடியிருப்புகளும், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள் அரசாங்க அடையாள அட்டைகள் உள்ளிட்ட வரி செலுத்துவதற்கான அனைத்தையும் வைத்துள்ளனர்.

இந்நிலையில், ரயில் நடைபாதை விரிவுபடுத்த அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுவதற்கு வந்தபோது, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், சேலம் கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், 15 நாட்கள் ரயில்வேயிடம் கால அவகாசம் கேட்டு அதற்கான கடிதமும் எழுதி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக ரயில்வே அதிகாரிகள் நிறுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, இன்று தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன் முயற்சியில் 72-வது வார்டு பகுதியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளலூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் வசிப்பதற்கான இருப்பிட உரிமைச் சான்றிதழ்களை 48 குடும்பங்களுக்கு வழங்கினார். உடன், குடிசை மாற்றுவாரியம் மண்டல பொறியாளர் ராஜசேகரன், கவுன்சிலர் சசிரேகா ஆகியோர் உள்ளனர்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...