கோவை அருகே சரக்கு ஆட்டோ மீது கார் மோதி விபத்து - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கோவை துடியலூர் அருகே வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் நடந்து சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது கார் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாஸ்கர் சாமிதாஸ் (37). இவர் சுந்தராபுரத்தில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்நிலையில், அவர் தனது காரில், துடியலூர் அருகேயுள்ள மேட்டுப்பாளையம் சாலையில் சென்றுள்ளார்.



துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ.காலனி கேட் அருகே வந்தபோது அவர் தூங்கியதால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த சாலையில் நடந்து சென்ற நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்த்த கட்டிட தொழிலாளி சக்திவேல் படுகாயம் அடைந்தார்.



மேலும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சாமிதாஸ் வலது கையில் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கார் விபத்து நடைபெற்ற காட்சி அருகில் இருந்த பேக்கரி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...