துடியலூர் எரியூட்டு மயானத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு!

கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள மாநகராட்சி எரியூட்டு மயானம் துவங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை அனுசரிக்கும் விதமாக கோவை ஈஷா அறக்கட்டளை சார்பில் எரியூட்டு மயான வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை: துடியலூர் எரியூட்டு மயானத்தின் 8ஆவது ஆண்டு நிறைவையொட்டி, ஈஷா அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.



கோவை துடியலூரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பாக எரியூட்டு மயானம் தொடங்கப்பட்டது. இதனை ஈஷா யோகா மைய அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் எரியூட்டு மயானம் ஆரம்பிக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பாக எரியூட்டு மயான வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நடும் பணியினை மேற்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துடியலூர் பகுதி கழக செயலாளர் அருள்குமார், பெரியநாயக்கன் பாளையம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோக்குமார், கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் நிர்மல்குமார், சீனிவாசன், மூர்த்தி, வெள்ளியங்கிரி, விஜயகுமார், கார்த்தி, சக்திவேல், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...