காரமடையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர் அகற்றம்!

காரமடை நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 26க்கும் மேற்பட்ட விளம்பர பேனர்கள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளதாக காரமடை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மாவட்டம் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் 26க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன. இதை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்.

இதுகுறித்து காரமடை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2023-ன்படி நகராட்சி எல்லைப் பகுதியில் விளம்பரப் பலகை, பிளக்ஸ் பேனர் வைக்க நகராட்சி ஆணையரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்க சட்டம் உள்ளது.

மேலும் விளம்பர பலகைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட இட உரிமையாளர் மற்றும் விளம்பர உரிமையாளரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே காரமடை நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் அனுமதியின்றி விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது.

அரசு, தனியார் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...