195 நாடுகளின் பெயர்களை உச்சரித்து 6 வயது சிறுவன் சாதனை!

கோவை உருமாண்டபாளையம் பகுதியை சேர்ந்த லோகித் என்ற 6 வயது சிறுவன் 195 உலக நாடுகளின் பெயர்களை எழுத்துக்களுடன் (Spelling) உச்சரித்த நிலையில், இதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கியது.


கோவை: 195 உலக நாடுகளின் பெயர்களை எழுத்துக்களுடன் (spelling) வேகமாக உச்சரித்து கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுவன் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கோவை உருமாண்டபாளையம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் மற்றும் ரம்யா தம்பதியின் இளைய மகன் லோகித்(6). ஒன்றாம் வகுப்பு பயிலும் லோகித், பள்ளியில் சேர்ந்த நாள் முதலிலேயே படிப்பில் அதிக ஆர்வமுடன் இருந்துள்ளார்.

வழக்கமாக ஆங்கிலத்தில் தடுமாறும் குழந்தைகள் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவன் லோகித்  வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை நினைவில் வைத்து எளிதாக அசாத்தியமாக ஒப்பித்து அசத்தி காட்டியுள்ளார்.



இதனை கவனித்த பெற்றோர்கள் சிறுவனுக்கு பொது அறிவை மேம்படுத்தும் வகையில் கூடுதலான தகவல்களை கற்றுத்தர தொடங்கியுள்ளனர். குறிப்பாக உலகில் உள்ள நாடுகளின் பெயர்களை கற்றுத் தந்த அவர்கள், அதற்கான ஆங்கில எழுத்துகளையும் (spelling) சொல்லிக் கொடுத்துள்ளனர்.



இதனையடுத்து உலகில் உள்ள 195 நாடுகளின் பெயர்கள் மற்றும் அந்நாடுகளின் எழுத்துக்களை (spelling)உச்சரித்து அசத்தி காட்டினார். சிறுவனின் இந்த சாதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியது.

தன் நினைவாற்றலால் ஆங்கில உச்சரிப்பில் அசத்தும் சிறுவனை பலரும் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...