கோவையில் புகையிலை விற்பனை குறித்து சுகாதாரத்துறை திடீர் சோதனை!

மலுமிச்சம்பட்டி, ஒத்தக்கால்மண்டபம் மற்றும் சீரபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில், கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் புகையிலை விற்பனை குறித்து நடைபெற்ற திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் புகையிலை விற்பனை தொடர்பாக சுகாதார துறை சார்பில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் Dr.P. அருணா தலைமையில் பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மூலம் மலுமிச்சம்பட்டி, ஒத்தக் கால்மண்டபம், சீரபாளையம் பகுதியில் திடீர் சோதனை நடைபெற்றது. 

இதில் நேர்முக உதவியாளர் குமார் மாவட்ட ஆலோசகர் சரண்யாதேவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிராஜன் சமூக பணியாளர் முரளி கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கும், பேக்கரி, கடை உரிமையாளர் ஆகியோருக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...