பல்லடத்தில் பத்திரப்பதிவு அதிகாரிகளை கண்டித்து பத்திர எழுத்தாளர்கள் வேலை நிறுத்தம்!

பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவாளர்களாக பணியாற்றி வரும் பிரவீனா மற்றும் ஈஸ்வரி ஆகிய இருவரும் லஞ்சம் கேட்பதாகவும், அலுவலகத்திற்கு வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்து பல்லடம் பத்திர எழுத்தாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பத்திரப்பதிவு அதிகாரிகளை கண்டித்து பத்திர எழுத்தாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் 39 கிராமங்கள் அடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் அதிகப்படியான வருவாய் தரும் பகுதிகளில் பல்லடமும் ஒன்று. 

பத்திரப்பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திருப்பூரில் இருந்து பணி மாறுதலாகி பல்லடம் வந்துள்ளனர். இவர்கள் வந்தபின் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பத்திர எழுத்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு பத்திரப்பதிவு பணிகள் நடைபெறாது என பல்லடம் பகுதி பத்திர ஆவண எழுத்தர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

இதன் எதிரொளியாக நேற்று முன்தினம் பத்திரப்பதிவு துறை மேற்கு மண்டல டிஐஜி சாமிநாதன் பல்லடம் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலக பதிவாளர்கள் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக்கொள்ளாததால் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனின் உறவினர் சுப்பராயன் என்பவரை நாடி நேற்று இரவு பல்லடத்தில் உள்ள பயணியர் மாளிகையில் செய்தி துறை அமைச்சரின் உறவினர் சுப்பராயன் மற்றும் பல்லடம் திமுக நிர்வாகிகள் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை ரகசியமாக அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.



பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் அறிவித்தபடி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 



நாள் ஒன்றுக்கு பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர்கள் போராட்டத்தால் 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திர பதிவு அலுவலகங்களிலும் லஞ்சத்தை ஒழிக்க இந்த போராட்டம் முன்னுதாரணமாக அமையும் எனவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



பத்திர எழுத்தாளர்களின் போராட்டத்தால் பத்திரப்பதிவு அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 



இதனால் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பத்திரங்களை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...