கோவை தெற்கு எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உடலில் ஓம் சிவா என்ற பச்சை உள்ளது!

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் 2 நாட்களுக்கு முன்பு புகுந்த மர்ம நபர் உள்பக்கமாக பூட்ட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் வெளியில் அனுப்பியை நிலையில், அவர் பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலில் ஓம் சிவா என பச்சை குத்தியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.



கோவை: கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர், தனது உடலில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.



கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குள் கடந்த திங்கட்கிழமை இளைஞர் ஒருவர் புகுந்து உட்புறமாக பூட்ட முயன்றார். 



அவரை எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் உதவியாளர் விஜயன் என்பவர் அடித்து விரட்டினார். 



அதனை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே அண்ணா சிலை ஜி.டி.மியுசியம் அருகே அந்த நபர், அரசு பேருந்தின் பின்சக்கரத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்தது, தற்கொலை செய்து கொள்வது போன்ற சிசிடிவி காட்சிகள் அனைத்தும் காவல்துறையினரால் கைப்பற்றபட்டது.

இதனிடையே அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் யார் என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக நுழைந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தி இருந்தார். 



இந்நிலையில் இறந்த நபரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர் தனது நெஞ்சில் ஓம் சிவா என பச்சை குத்தி இருப்பது தெரியவந்துள்ளது. அலுவலகத்துக்குள் நுழைந்த நபர் மலையாளத்தில் பேசினார் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்து பந்தயசாலை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...