கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்த முயன்றவர் கைது - 500 கிலோ அரிசி பறிமுதல்!

பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று காலை கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற மதுக்கரையை சேர்ந்த சிவமுருகேசன் என்பவரை கைது செய்தனர்.



கோவை: கோவையில் இருந்து மினி ஆட்டோ மூலம் ரேசன் அரிசி கடத்த முயன்ற நபரை சுந்தராபுரம் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க, குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாநில எல்லை சோதனை சாவடிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று காலை கோவை சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் செல்லும் சாலையில் ரோந்து மேற்கொண்டனர். 

அப்போது அங்கு வந்த மினி ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி தலா 50 கிலோ வீதம், 10 மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் மதுக்கரை அட்லாண்டிக் நகரை சேர்ந்த ராம்பால் மகன் சிவமுருகேசன் (50) என்பதும், இவர் காந்திபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மலிவு விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை கேரளாவிற்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...